×

48 வருடங்களுக்கு முன் படித்த பழைய மாணவர்கள் சந்திப்பு

கும்மிடிப்பூண்டி, மே 9: கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி 1976-1977ம் கல்வி ஆண்டில் அரசு உயர்நிலை பள்ளியாக இருந்தபோது அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி படித்த மாணவர்கள் 25 பேர் 48 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று பள்ளியில் ஒன்று கூடினர். இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் மாணவிகள் ஒன்றுகூடி சந்தித்து தங்கள் பள்ளி வாழ்க்கையை குறித்து கலந்துரையாடியதோடு, தங்களது தற்போதைய குடும்பம், பிள்ளைகள் பேரக்குழந்தைகள் குறித்தும் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டனர். மேலும், படித்த பள்ளிக்கு தேவையான உதவியை செய்ததோடு, விரைவில் பள்ளிக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்தனர். இந்த விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.திருப்பதி, விழா குழுவைச் சேர்ந்த சார்லஸ், விஜயகுமார், ஹரிஷ், செல்வம், சாய்ராம் உள்ளிட்டோர் முன் நின்று நடத்தினர்.

The post 48 வருடங்களுக்கு முன் படித்த பழைய மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Govt Boys Higher Secondary School ,Manellor ,Government Boys Higher Secondary School ,
× RELATED இரண்டாம் கட்டமாக இலங்கை மறுவாழ்வு...